நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்: ஏரி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கோரிக்கை

Production of Navratri Kolu dolls Work intensity: Request for permission to take lake soil    நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்: ஏரி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கோரிக்கை

விழுப்புரம்- நவராத்திரியையொட்டி, விழுப்புரம் அருகேவுள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் பல வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் துவங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10 வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில், 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கமாகும்.

இந்தாண்டு நவராத்திரி விழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, விழுப்புரம் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் 35 வடிவங்களில் சுவாமி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். 1.50 அடி முதல் 3 அடி வரையிலான கொலு பொம்மைகள் இயற்கை சூழலை பாதிக்காத வகையில் கூழ், வண்டல் மண் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு, கிருஷ்ணர், மகாவிஷ்ணு, ஆண்டாள், மீனாட்சி, கருட ஆஞ்சநேயர், திருவடி, ராமர் உட்பட 35 வடிவங்களில் சுவாமி கொலு பொம்மைகள் தயார் செய்யப்படுகிறது. இங்கு தயாராகும் கொலு பொம்மைகளுக்கு அதிகளவு வரவேற்புள்ளதால் பெங்களூரு, கேரளா, மதுரை, கோவை, சென்னை, ஆந்திரா பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்கள் வந்துள்ளது.

இதை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தற்போது கொலு பொம்மைகளுக்கு ஸ்பிரே மூலம் வண்ணம் தீட்டும் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்த கொலு பொம்மைகள் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் தரப்பில்,

நாங்கள் பல ஆண்டுகளாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் உள்ளோம். எங்களுக்கு அரசு மூலம் எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் நாங்கள் பண்ருட்டியில் இருந்து தான் ஏரி வண்டல் மண்ணை கொண்டு வந்து பொம்மை தயாரிக்கிறோம்.

இங்கு, அருகேவுள்ள சித்தலிங்கமடம், அண்ட்ராயநல்லுார் ஏரிகளில் வண்டல் மண் இருந்தாலும் அதிகாரிகள் எடுக்க அனுமதி தர மறுக்கின்றனர். எங்களது பிழைப்பிற்கு அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி தந்து உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்- நவராத்திரியையொட்டி, விழுப்புரம் அருகேவுள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் பல வடிவங்களிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->