விலை உயர்ந்தால் கொள்முதல் , குறைந்தால் ஒதுங்கும் அரசு: விளை பொருட்களுக்கு விலை இன்றி விவசாயிகள் தவிப்பு

If the price goes up, the government will buy it, if it goes down, the government will stand aside: Farmers are suffering because of no price for the produce  விலை உயர்ந்தால் கொள்முதல் , குறைந்தால் ஒதுங்கும் அரசு:  விளை பொருட்களுக்கு விலை       இன்றி  விவசாயிகள்  தவிப்பு

மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.
தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தக்காளி, முருங்கைக்காய் கிலோ ரூ. 5க்கு விற்கிறது.
பருத்தி கிலோ 70 க்கு விற்பனையாகிறது. இதேபோல் பல காய்கறிகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்தது.
அதே நேரம் விலை வீழ்ச்சியாக இருக்கும் போது கொள்முதல் செய்வதில்லை. இதனால் நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
பல இடங்களில் முருங்கை, தக்காளி செடிகளில் பறிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. காய்கறி உற்பத்தி வீழ்ச்சி
அடையும் போதுதான் விலை அதிகரித்து காணப்படுகிறது. விலை அதிகரிக்கும் போது ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர்.
ஆனால் விலை வீழ்ச்சியின் போது பல விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
மத்திய, மாநில அரசுகள் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய
வேண்டும்.
விலை வீழ்ச்சியின் போது பயிர்களுக்கு மானியம் அறிவித்து விவசாயிகளை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் கட்டுபடியான விலை


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->