இதையும் கண்காணியுங்க: நான்கு வழி சாலை சந்திப்புக்களில் விபத்து: விளக்கு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் இன்றி அவதி

மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் பல இடங்களில் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. அதிகாரப்பூர்வமாக போக்குவரத்து அறிவிக்கப் படவில்லை. ஆனால் பெரும்பாலான பகுதிகள் வாகன பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் கிராம சாலைகள் இணைக்கும் பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாகனங்கள் செல்ல சாலைகளில் முறையான அறிவிப்பு பலகைகள் இல்லை. இதனால் நான்கு வழி கிராம சாலை சந்திப்பு பகுதிகளில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கிராம சாலைகள் சந்திக்கும் பகுதிகளில் விளக்குகள் ,ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாமல் உள்ளது.

கிராம சாலைகளில் வரும் வாகன ஓட்டுநர்கள் இப்பகுதியில் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குவதால் நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.

கிராம சாலைகளை இணைக்கும் பகுதிகளில் முறையாக இரவு, பகலில் வாகன ஓட்டுநர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகளை வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவையான இடத்தில் ஒட்டப்பட வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->