நடுவீரப்பட்டு,- சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் முன்னிலை வகித்தார். திட்ட இணை இயக்குனர் செந்தில்வடிவு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், காலை உணவு திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் 1,160 பள்ளிகளில் படிக்கும் 66,630 மாணவ, மாணவியர் பயனடைவர்’ என்றார்.
தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டம், தோட்டக்கலை, வேளாண் துறை, தாட்கோ, சமூக பாதுகாப்புதிட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் மூலம் 151 பயனாளிகளுக்கு 2 கோடியே 2 லட்சத்து எட்டாயிரத்து 700 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகர், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் விஜய்ஆனந்த், ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் அருண், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாநில பொதுக் குழு உறுப்பினர் பாலமுருகன், துணை செயலாளர் ராஜேந்திரன், விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், அவைத் தலைவர் சாரங்கபாணி, விவசாய சங்க துணைஅமைப்பாளர் பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராமன், ஊராட்சி தலைவர் மங்களம், துணைத் தலைவர் ராஜாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நடுவீரப்பட்டு,- சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement