திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது.
ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில் கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெற்றது.
இரு கட்சியினரும் திருப்பூர் நகரில் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் குறித்த பிளக்ஸ் பேனர்களை வைத்தனர். இதுதவிர வேறு சில அமைப்புகளும் தங்கள் நிகழ்ச்சி குறித்த பேனர்களை சில இடங்களில் அமைத்தனர்.நிகழ்ச்சிகள் முடிந்து ஐந்து நாட்களாகியும், பேனர்களை யாரும் அகற்றவில்லை. தாராபுரம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் இது போன்ற பிளக்ஸ் பேனர்கள் ரோட்டோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளன.
நகரப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வித பேனர்கள், ேஹார்டிங்குகள் வைக்க கூடாது என கோர்ட் உத்தரவு உள்ள நிலையிலும், இது போல் அரசியல் கட்சியினர் அதனை பொருட்படுத்தாமல் பேனர்கள் அமைப்பதும், நிகழ்ச்சி முடிந்தும் கூட அதை அகற்றாமல் மெத்தனமாக இருப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது.ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement