ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்| Maha Kumbabhishekam Kolagalam at Anjaneya Swamy Temple

விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.,

நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:30 மணிக்கு யாத்ராதானம், 9:.00 கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேகத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், ஜீயர் சுவாமிகள், தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் வெங்கடேஷ் பாபு சுவாமிகள், திருக்கயிலாய ஸ்ரீ கந்தப்பரம்பரை வாமதேவ கணேசதேசிக சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாண வைபவம், இரவு 7:30 மணிக்கு ராமர் பட்டாபிஷேக அலங்காரத்தோடு ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, பரம்பரை அறங்காவலர் குமார், அர்ச்சகர் பத்மனாபாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.

விழுப்புரம்,- விழுப்புரம், திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை மற்றும் முதல்கால யாகசாலை பூஜையுடன்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->