
குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. உலகில் உள்ள அனைவருக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் பெண் குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம், பலருக்கும் பிடிக்கும். அப்ப இது உங்களுக்கு தான்.
எனவே ஒற்றை பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக நடைபெற்று வரும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதற்காக அந்த அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒற்றை பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, இந்திரா காந்தி பாலிகா சுரக்ஷா யோஜனா திட்டம் என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே ஒற்றை பெண் குழந்தையின் பெற்றோருக்கு, மாநில முதல்வர், சுக்விந்தர் சிங் சுகு ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in