ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டிற்கும், அசோக் கெலாட்டிற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பேரையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் தலைமை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தது. அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசவில்லை.


ஆனால் அதற்கு முன்பு முந்தைய வசுந்தரா ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சச்சின் பைலட் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார். ஆனால் அசோக் கெலாட் அக்கோரிக்கையை கடைசி வரை ஏற்கவே இல்லை. தற்போது அசோக் கெலாட்டை வசுந்தராவும், பா.ஜ.க.எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திராவும் சந்தித்து பேசி இருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.
அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் சேர்ந்து விடக்கூடும் என்று எல்லாம் பேசுகிறார்கள். ஏற்கனவே சச்சின் பைலட்டை காங்கிரஸ் முதல்வராக்க விரும்பிய போது அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி விலகப்போவதாக எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com