சென்னை மாநகரைப் பொறுத்த அளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு குறித்து ஆய்வுசெய்த குழுவினர், சென்னை மாநகருக்கான புதிய விதிகளை வரையறுத்தனர். அதன்படி, தற்போது இந்த விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன.


இந்த நிலையில், புது வேகக் கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளில், 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், நேற்றைய தினம் (நவம்பர் 4-ம் தேதி) 121 வழக்குகள் புது வேகக் கட்டுப்பாடு விதிகளின்படி பதிவுசெய்யப்பட்ட நிலையில், ரூ.1.21 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com