சென்னை மாநகரைப் பொறுத்தளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்த குழுவினர், சென்னை மாநகருக்கான புதிய விதிகளை வரையறுத்தனர்.


சென்னை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளைத் தவிர்க்கவும் புதிய வேகக்கட்டுப்பாடு விதி பயன்படும் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில், இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் வசூல் வேட்டையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com