திருப்பூர் அருகே, கோவில் கிணற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கிறது.
திருப்பூர் அருகே உள்ள பாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. இவர் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியிலும், இவர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜி அதே பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் நட்பாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில், இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட விஜியின் தாயார், அவருடைய காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதனால், விஜி தாய் தன் காதலை எதிர்க்கிறாரே என்று கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே, கடந்த 7ஆம் தேதி அவர் வழக்கம் போல பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால், வேலைக்கு சென்ற அவர், வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய், இது பற்றி காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான கிணற்றில், ஒரு இளம் பெண்ணின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது..
இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர், கிணற்றில் கிடந்த உடலை, தீயணைப்புத் துறையினரின் உதவியோடு, மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அது குறித்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் மூலமாக, கிணற்றில் உயிரிழந்து கிடந்தது விஜி தான் என்ற விபரம் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து தங்களுடைய அடுத்த கட்ட விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், விசாரணையின் முடிவில் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதாவது, காவல்துறையினரின் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட விஜியின் காதலுக்கு, அவருடைய தாய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், மன உளைச்சலில் இருந்த விஜி, மனம் உடைந்து கோவில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மை காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து, தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com