மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறது. அஜித் பவார் அணியினர் தங்களது அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனிலும் மனுக்கொடுத்து இருக்கிறனர். இதனால் அஜித் பவார் மற்றும் சரத் பவார் அணியை சேர்ந்த இரு பிரிவினரும் தங்களது தரப்பில் இருக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனால் இரு அணியினரும் கட்சி நிர்வாகிகளிடம் இதற்காக கடிதங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சரத் பவாருடன் சமாதானமாக செல்ல அஜித் பவார் பல முறை முயற்சி மேற்கொண்டார்.
ஆனால் சரத் பவார் சமாதானம் அடையவில்லை. இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்க தேர்தல் கமிஷன் கெடு விதித்து இருப்பதால் அதற்கான வேலையில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் பவார் குறித்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே அளித்துள்ள பேட்டியில், “தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படவில்லை.
எங்களது அணியின் ஒரு பிரிவு ஆட்சியில் இருந்தாலும் எங்களது கட்சி ஒன்றுதான். அஜித் பவார் எங்களது கட்சியின் மூத்த தலைவர். அவர் மாறுபட்ட முடிவை எடுத்திருக்கிறார். அது குறித்து சபாநாயகரிடம் புகார் செய்திருக்கிறோம். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க பா.ஜ.க. மூன்று முறை முயற்சி மேற்கொண்டது. இப்போது அதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அஜித் பவார் மீண்டும் எங்களிடம் வருவாரா என்று தெரியாது. ஆனால் நாங்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம். குடும்பத்தில் அரசியல் சிக்கலை ஏற்படுத்த அனுதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
