ஆனால், இந்தச் செய்திகள் ‘பாரதம்’ என்ற பெயரைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. நான் பாரத அரசின் அமைச்சர்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்ததான விவாதங்கள் சற்றே தணிந்தன.
இதற்கிடையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 3 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேசிய பாடத்திட்டத்தில், பள்ளி பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருள்கள் (NCF) ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக, குழு அமைத்தது.
இந்த குழுவில் களப்பணிக்கான பதக்கம் வென்ற மஞ்சுல் பார்கவா, பிரதமர் பிபேக் டெப்ராய்க்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் (PM Bibek Debroy), ஆர்.எஸ்.எஸ்-அமைப்புடன் தொடர்புடைய சம்ஸ்கிருத பாரதியின் நிறுவன உறுப்பினர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, பரோபகாரி சுதா மூர்த்தி, பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 19 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு, புதிய பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பாடப்புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என்று திருத்தம் செய்ய அரசுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கிறது. NCERT குழுவின் இந்தப் பரிந்துரை `இந்தியா – பாரத்’ என்ற விவாதத்தை மீண்டும் தொடக்கி வைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com