`தேசபக்தியை வளர்க்க ராமாயணம், மகாபாரதம்’ – ஓயாத NCERT

எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்:

இந்தநிலையில், பள்ளிப் பாடப்புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைச் சேர்க்கும் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக,

மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி காக்(Sonallaxmi Ghag), “பா.ஜ.க.வும், சங்பரிவாரும் கல்வித் துறையைத் தாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. வளர்ந்த நாடுகள் அனைத்தும் கல்வியில் முதலீடு செய்யும் போது, ​​இந்தியாவை தாலிபான் ஆக்கும் முயற்சிகள் நடக்கின்றன” என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதேபோல, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், “`18 வயது வரை மாணவர்களுக்கு மதத்தைப் பற்றி கற்பிக்கக்கூடாது. அவர்கள் முதிர்ச்சியடைந்தவுடன் அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி காக்மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி காக்

மஹாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சோனாலக்ஷ்மி காக்

அதேபோல, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா, “என்.சி.இ.ஆர்.டியும், அரசும் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, சீதா, சூர்ப்பனகை போன்ற பெரிய தெய்வங்களைக் கைவிடுவதையும், திருமணத்தின் பேரில் மூக்கு, காதுகளை அறுத்துக்கொள்ளும் அவலத்தையும், திரௌபதி போன்ற பல பெண் தெய்வங்களின் ஆடைகளைக் களைவதையும் ஊக்குவிக்கின்றனவா? அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டவர்கள். குடும்ப பிரச்னையை மேலும் மேம்படுத்துவதற்கு அரசு ஆதரவாக உள்ளதா?” என கேள்வி எழுப்பியவர், “பாடத்திட்டத்தில் நாட்டின் கதாநாயகர்களைப்பற்றி பாடம் கற்பிப்பது என்றால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தேசப்பிதா மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பாபா சாகேப் அம்பேத்கர், ராணி லக்ஷ்மிபாய், சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், உத்தம் சிங் போன்ற தேசத்தின் மகத்தான புதல்வர்களையும், தேசத்தை கட்டியெழுப்புபவர்களையும், மாவீரர்களையும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்!” என கருத்து தெரிவித்திருக்கிறார்.

சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளரும், “2014 முதல், கல்வியில் காவிமயமாக்கல் உள்ளது. வரலாற்றுடன் மதத்தையும் சேர்த்துக்கொள்வது வரலாற்றிற்கு அநீதி” என குற்றம் சாட்டியிருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியாசமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா

இவைதவிர, சிபிஐ(எம்) கட்சியும் “வாக்காளர்களை கவர பா.ஜ.க இத்தகைய தந்திரங்களை பயன்படுத்துகிறது. தேர்தல் வரும்போதெல்லாம், தேர்தல், வகுப்புவாத வெறியை தூண்டி தேர்தலில் வெற்றி பெற மோடி விரும்புகிறார், இதனால் அவருக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்ட முடியும்!” என என்.சி.இ.ஆர்.டியின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. முஸ்லிம் ஸ்பேசஸ் அமைப்பும், “பாடப்புத்தகங்களில் இருந்து முகலாயர்கள், சுல்தான்கள் மற்றும் முஸ்லீம் சுதந்திர போராட்ட வீரர்களை நீக்கிய பிறகு, சமூக அறிவியலுக்கான பள்ளி பாடத்திட்டத்தை `திருத்துவதற்கான’ NCERT குழு, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது” என விமர்சனம் தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *