அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை அதிரடியாக மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 21-ம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்டது.


அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘பா.ஜ.க-வின் கூட்டாளியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது’ என்று விமர்சித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்றும் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால், இத்தகைய நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டிருக்கிறது’ என்றார்.
‘பணப்பரிவர்த்தனையே நிகழாத இந்த விவகாரத்தில் சொத்துகள் முடக்கப்படுவதற்கு, இந்த நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருக்கிறது என்பதே காரணம். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பயப்படாது’ என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். பாஜக-வினரோ, இது பழைய வழக்கு. அமலாக்கத்துறை, விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களை மேற்கொள்கிறது என ஒதுங்கி கொள்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com