1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக பேச்சுகள் எழுந்தன. அதேபோல் சீமானுக்கு நெருக்கமான சிலரும் அ.தி.மு.க-வோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கூட்டணி சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் சீமான்.
இறுதியாக பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும், அதில் உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம். நமக்கு முன்பே தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க-வுக்கு,10 சதவிகித வாக்குகள் வரை கிடைத்தது. இந்த படிப்பினையைக் கொண்டு, இனிவரும் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சியும் தனித்துதான் போட்டியிடும். அப்படி ஒருவேளை நாம் கூட்டணிக்குச் சென்றால், 7 சதவிகிதமாக இருக்கும் கட்சியின் வாக்கு, 0.005 சதவிகிதமாகக் குறைந்துவிடும். மேலும், நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் சார்ந்திருக்கும் ஊரை, நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
`நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம்” என தீர்மானமும் பொதுக்குழுவில் இயற்றப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com