ஐ.நா.சபையும் தாவூத் இப்ராகிமை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கராச்சியில் தங்கி இருக்கும் தாவூத் இப்ராகிமை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சோசியல் மீடியாவில் செய்தி வைரலாக பரவி இருக்கிறது.


இரண்டு நாட்களுக்கு முன்புதான் தாவூத் இப்ராகிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அவன் சிகிச்சை பெறும் மாடியில் அவன் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனையின் உயர் அதிகார்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பான தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்ய மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் உறவினர்கள் அலிஷா பார்கர் மற்றும் சாஜித் ஆகியோரிடம் மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் தாவூத் இப்ராகிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கராச்சியில் வசிப்பதாக தாவூத்தின் சகோதரி மகன் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com