நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ்,


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இடதுசாரித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தொகுதிப் பங்கீடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் வேட்பாளராக மம்தா முன்மொழிந்ததாகவும், கார்கேவே அதனை மறுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
நன்றி
Publisher: www.vikatan.com