சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்திருக்கிறது.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். அவரது கைது சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், மூன்றாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் ட்ரங்க் பெட்டியில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றோடு முடிவடைந்ததையடுத்து, புழல் சிறையிலிருந்து சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி வாயிலாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி சிவக்குமார், அன்றைய தினத்தில் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com