வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!… டிராஃபிக் அபராத சலான்களை கையில் வைத்துள்ளீர்களா?… போக்குவரத்துத் துறை அதிரடி!

வாகனம் ஓட்டும்போது விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான சலான்களும் வழங்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் இன்னும் பணம் செலுத்தாமல் ட்ராஃபிக் சலான்களை வைத்திருந்தால் மற்றும் அபராதங்களைச் செலுத்தத் தவறினால் போக்குவரத்து துறையானது ஐந்துக்கும் மேற்பட்ட டிராஃபிக் சலான்கள் நிலுவையில் உள்ளவர்கள் முக்கியமான பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செய்ய முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத் துறை எடுத்துள்ளது. மற்றொரு நபருக்கு பெயரை மாற்றுதல் அல்லது வாகன போர்ட்டல் மூலம் வாகனத் தகுதிச் சான்றிதழைப் பெறுதல் போன்ற சலுகைகள் உங்களுக்கு கிடைக்காமல் போகும்.

100க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 20,684 வாகனங்கள் எதற்கும் அபராதம் செலுத்தவில்லை என போக்குவரத்து காவல் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி போக்குவரத்து காவல்துறை ஆன்லைன் அபராதம் செலுத்தாத பல வழக்குகளை போக்குவரத்துத் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது, வாகன போர்ட்டலில் 90 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஐந்து சலான்களைக் கொண்ட வாகனங்களை ‘பரிவர்த்தனை செய்ய முடியாதது’ என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள விதிகளை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை மொத்தம் 2,63,96,367 நோட்டீஸ்கள் 58,81,261 வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து அதிகாரிகள் வழங்கிய சலான்களை அவர்கள் செலுத்தவில்லை என்பதோடு, அந்த வாகனங்கள் மீண்டும் மீண்டும் அத்துமீறி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *