Today Sports News 2023

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியின் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் மற்றும் மங்கோலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் துவக்கத்தில் டாஸ்க் வென்ற மங்கோலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட் செய்த நேபாளம் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்களை குவித்து சாதனை படைத்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் குஷல் புர்ட்டல் மற்றும் ஆஷிப் முறையே 19 மற்றும் 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். இவர்களை தொடர்ந்து ஆட்டத்தில் களமிறங்கிய அணியின் கேப்டன் ரோகித் பவுடல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய திபேந்திர சிங், 9 பந்துகளில் 8 சிக்சர்கள் அடித்து அதிவேகமாக அரைசதம் கடந்தார். இதன் மூலம் திபேந்திர சிங், இந்திய யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007-ஆம் ஆண்டு இந்திய வீரர் யுவராஜ் சிங், ஐசிசி டி20 உலக கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 12 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்து, உலக சாதனை படைத்தார். இதனை, திபேந்திர சிங் தனது திறமையான ஆட்டத்தின் மூலம், தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சமன்செய்துள்ளார்.
மேலும், அதிரடியாக விளையாடிய குஷல் மல்லா 50 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆடமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மங்கோலியா அணி ஆட்டத்தில் களமிறங்கியது. ஆனால், 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆட்டத்தில் தோல்வியுற்றது. ஆதலால், இந்த ஆட்டத்தில் மங்கோலியா அணியை 273 என்ற ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாளம் அணி அபார வெற்றி பெற்றது.
நன்றி
Publisher: jobstamil.in