மோடி அரசு: 140 கோடி இந்திய மக்களை உளவு பார்க்கும் திட்டம்? –

இது தொடர்பாக வெளியான செய்தியில், “மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் (Septier) மற்றும் காக்னைட் (Cognyte) என்ற நிறுவனங்களிடமிருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்கி, நாட்டு மக்களை உளவுபார்க்க திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இந்தக் கருவிகளைக் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் செல்போன் டவர்களில் பொருத்தியிருக்கிறது. அதன் மூலம் தனது குடிமக்களை உளவு பார்க்கிறது. இதன் மூலம், இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்தொடர்புகளை உளவு பார்க்க அரசு அனுமதியளிப்பதாக கூறப்படுகிறது.

அமித் ஷா, மோடிஅமித் ஷா, மோடி

அமித் ஷா, மோடி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், சிங்டெல் (சிங்கப்பூர் நிறுவனம்) ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த உளவுக் கருவிகள் வாங்கப்பட்டு ஆழ்கடல் கேபிள் மையங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உளவுக் கருவிகள் மூலமாக செல்போன் உரையாடல், குறுந்தகவல், வாட்ஸ்அப் தகவல், இணைய நடவடிக்கைகள், மெயில் தகவல்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும்.

எனவே, இனி இந்தியர்களின் அந்தரங்க தகவல்கள், அவர்களின் உரையாடல்கள் உள்ளிட்ட விஷயங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் வேவுபார்க்கும். இந்தியா மட்டுமே, இவ்வளவு வெளிப்படையாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களை இதில் ஈடுபடுத்திக் கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *