இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்ததில் ஆச்சரியம் இல்லை.” என்றிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸை சாடி இருக்கிறார். `ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை காங்கிரஸ் கட்சி மறைக்கப் பார்க்கிறது. இது பாலஸ்தீனத்தில் உள்ள பயங்கரவாதிகளை ஆதரிப்பது போல் உள்ளது’என்றிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் அங்குள்ள நிலவரத்தை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com