நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் இருந்தது. இதனால் வருவாய்த்துறை ஆவணப்படி அரசு நிலத்தை வரையறுக்க நெடுஞ்சாலை எல்லையில், கடந்த நாளில் விஜயவர்மன் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி எல்லை கற்கள் அமைக்கப்பட்டன. அவரின் பட்டா நிலம் அளக்கப்படவில்லை. சாலை புறம்போக்கை வரையறை செய்து எல்லை கற்கள் அமைக்கப்பட்டன. இதில், அந்த வளைவு உள்ள இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாக உள்ளது உறுதியானது.


இந்த நிலையில் விஜயவர்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் விதிகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்து வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது வேறு யாரும் உரிமை கூற முடியாது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com