இந்த நிலையில், 1998-ம் ஆண்டு போடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்தும், தமிழக உயர் கல்வித்துறையின் நீட்டிக்க மறுத்த உத்தரவை எதிர்த்தும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், “சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை சிறுபான்மை பிரிவினருக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மதிப்பெண் தகுதி அடிப்படையிலும் சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தேசத்தின் நலன் சார்ந்தது. சிறுபான்மை அந்தஸ்து என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத்தான்!” எனக்கூறி வாதிட்டார்.


அதைத்தொடர்ந்து வழக்கு குறித்துப் பேசிய நீதிபதிகள், “தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அனைத்து சிறுபான்மையினருக்கும் அரசியலமைப்பில் கல்வி, மொழி ஆகியவற்றில் உரிமை தரப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது.


50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம். அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அந்த இடங்கள் 50 சதவீதக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கருத முடியாது. எனவே, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது!” என உத்தரவிட்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com