மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், “எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தந்து, நான் அமைச்சராவதற்கு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், எம்.பி ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதல்வருடைய மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் திருவெண்காடு என்பதால், கிராமசபைக் கூட்டம் கவனம் பெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “இந்த கிராமசபைக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இரண்டாவதாக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பைத் தந்தார்கள். அதற்கு முழு காரணம் முதல்வரின் மனைவி மரியாதைக்குரிய துர்கா ஸ்டாலின் தான். எனக்கு ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்று தந்து, அரசியலில் அமைச்சராக உயர்வதற்கு காரணமாக இருந்தவர் துர்கா ஸ்டாலின். அதனை நன்றியோடு இந்த இடத்தில் பதிவுசெய்கிறேன்.
ஒருவேளை அவர்கள் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தராவிட்டால், என்னுடைய அரசியல் திசை மாறிப் போயிருக்கும். நாங்கள் பெரிதும் மதிக்கின்ற துர்கா ஸ்டாலின் பிறந்த மண்ணில் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். 100 நாள் வேலைத் திட்டத்தில் நாள்கள் அதிகப்படுத்தப்படும், டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும், பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை பெறுவதில் விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com