அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ஷேக்வாகித் அவர்கள் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க விளையாட்டு மேம்பட்ட அணிச் செயலாளர் தயாநிதி மாறனும்… “விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட மொக்தியார் அலி அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ரோமியன் அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி ராஜாவும் அறிவித்திருக்கின்றனர்.


அமைச்சர் மஸ்தான் வெளிநாட்டில் புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவரின் மகனும், மருமகனும் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com