வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே 56 வருஷம் எம்.எல்.ஏ-வாக உட்கார்ந்திருந்தவன் நான் ஒருத்தன்தான். இதைக்கேட்டு மோடி ‘ஓ..’ என்றுகேட்டு அசந்துபோய்விட்டார். நான் உங்களுடன் பிறந்தவன்.


இந்தக் காட்பாடி மண்தான் என்னை படிக்க வைத்தது. இந்தக் காட்பாடி மண்தான் கட்சிக் கொடுத்தது. அதனால்தான் பொண்ணு கட்டுனா கூட காட்பாடியில்தான் கட்டணும்னு கட்டினேன். வேறு ஊரில் இருந்தும்கூட ரொம்பப் பெரிய பெரிய இடத்துலருந்து பொண்ணு வந்தது. ‘சரிபட்டு வராது நமக்கு’னு காட்பாடி பொண்ணத்தான் கட்டணும்னு கட்டினேன். ஆகையால், இந்த மண்ணை நேசிக்கிறவன் நான். இந்த மண்ணோடு இருக்கிறவன் நான். இந்த மாநகராட்சிக்கு மட்டும் மோசமான அதிகாரிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். எந்த ரோட்டை பார்த்தாலும் சரியில்லை. நாளைக்குப் பட்டை உரிக்கிறேன்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com