“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’
-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் அக்கறையான’ பதில் இது.
‘சூழல் கருதி பணமாகக் கொடுக்க அனுமதிக்கிறோம். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணம் சென்று சேர்வதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்’ என்கிற அறிவுரையுடன் நீதிமன்றமும் அனுமதியளித்தது.
ஆனால், நிவாரணத் தொகையில் பெரும்பகுதி, ‘அப்பன் வீட்டுப் பணம்’ என்பதாக கொள்ளை போய்க் கொண்டிருப்பதுதான் நிஜமாக இருக்கிறது.


`சென்னை மாவட்டம் முழுமையாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில வட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகையாக வழங்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு. நிவாரணத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே குழப்படிகள்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, ‘சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் நிவாரணம் உண்டு’ என்று அமைச்சர்களே பேட்டியளித்தனர்.
பிறகு, `ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும்’ என்றார்கள். நிவாரணம் வழங்குவதற்கு முன்பாக, ரேஷன் கார்டு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய – மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களுடைய பாதிப்பு விவரங்களை, வங்கிக் கணக்கு விவரத்துடன், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆய்வுக்குப் பிறகு, வங்கிக்கணக்கில் நிவாரணம் சேர்ப்பிக்கப்படும்‘ என்றார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com