‘மாயா குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பா’..!! ’ரொம்பவும் மோசமான பொண்ணு’..!! பரபரப்பை கிளப்பிய சுசித்ரா..!!

‘மாயா குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பா’..!! ’ரொம்பவும் மோசமான பொண்ணு’..!! பரபரப்பை கிளப்பிய சுசித்ரா..!!

பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன் என்றும் அவ ஒரு மோசமான பொண்ணு என்றும் முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுசித்ரா அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாயா பற்றி மோசமான அவதூறுகளை பரப்பிய சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாயா குறித்து சுசித்ரா கூறுகையில், ”மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதீப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சனை.

மாயா இயக்குநர் கௌதம் மேனனின் உதவி இயக்குநருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கியிருக்கிறா, அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா பூர்ணிமாவை கவர் பண்ணப் பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீர்ல, பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாயாவை பற்றிய இந்த கருத்துக்கு எதிராக மாயாவின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதை பற்றி பாடகி ஸ்வாகா instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அதில், சுசித்ராவின் சமீபத்திய நேர்காணலில் அவர் மாயா பற்றிய மோசமான அவதூறுகளை முன்வைத்தது கண்டிக்கத்தக்கது. மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் லெஸ்பியன் மக்களின் வாழ்க்கையை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதபமாக இருக்கிறது. தனக்கு வெளி உலகில் நடக்கும் அவமானங்களையும், அநீதிகளை பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவு ஆதரவாளர்களுக்கும் நன்றி என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *