சூடுபிடிக்கும் மதுரா மசூதி விவகாரம்… வழக்கும் நிலவரமும்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டப்படி’ இந்தக் கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021, பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, `கோயில், மசூதி அமைந்துள்ள நிலம் தன்னுடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்றும், 1968-ம் ஆண்டும் ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அந்த முழு நிலத்தையும் தன்னிடமே வழங்க வேண்டும்’ என்றும் வழக்கு தொடர்ந்தார். இதேபோல கிட்டத்தட்ட 18 மனுக்கள் மசூதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றுசேர்த்து ஒரே வழக்காக உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

மதுரா சாகி ஈத்கா மசூதி மதுரா சாகி ஈத்கா மசூதி

மதுரா சாகி ஈத்கா மசூதி

இந்தநிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர்-14) இந்த வழக்கு மீண்டும் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மயாங் குமார், `மதுராவின் சாகி ஈத்கா மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த கள ஆய்வை இந்திய தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் எனவும், ஆய்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோவாகப் பதிவுசெய்து முழு அறிக்கையை அலகாபாத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், கள ஆய்வின்போது தொல்லியல் அதிகாரிகள் மட்டுமல்லாமல் இந்து, முஸ்லிம் மற்றும் அரசு தரப்பில் மூன்று பிரதிநிதிகளை நியமிக்க கோரும் மனு தொடர்பான விசாரணை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடத்தப்படும் என்றும் நீதிபதி மயாங் குமார் தெரிவித்திருக்கிறார்.

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி என கூறப்படும்  இடத்தில் பாதுகாப்புமதுரா கிருஷ்ண ஜென்ம பூமி என கூறப்படும்  இடத்தில் பாதுகாப்பு

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி என கூறப்படும் இடத்தில் பாதுகாப்பு
ட்விட்டர்

இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்கக்கோரி சன்னி வஃக்பு வாரியம் மற்றும் சாகி ஈத்கா மசூதி அறக்கட்டளை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `சாகி ஈத்கா மசூதியில் கள ஆய்வு மேற்கொள்வதற்கு தடை விதிக்க முடியாது’ என்று கூறி மறுப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த வழக்கை வரும் 2024, ஜனவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *