மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி முதல்வர் ஷிண்டே கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். நேற்று முன் தினம் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மீது கல் வீசித் தாக்கினர். இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர். போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசித்தாக்கினர். இதில் போலீஸார் பலர் காயம் அடைந்தனர். சிலர் அரசு பஸ்களுக்கு தீவைத்தனர். ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
உடனே போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இக்கலவரத்தில் உதவி போலீஸ் கண்காணிப்பாளர் சச்சின் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். இது தவிர போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதில் 20 பேர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஷிண்டே இச்சம்பவத்தை துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு வன்முறை குறித்து விசாரிக்க உயர்மட்டக்கமிட்டி ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டார். மகாராஷ்டிரா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மராத்தா இன மக்களுக்கு மகாராஷ்டிரா அரசு இட ஒதுக்கீடு வழங்கியது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com