மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். தற்போது, 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.


மணிப்பூரில் பிரச்னை தீவிரமாக இருந்த நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்றார். முகாம்களில் இருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடியும் அங்கு செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிவருகிறார்கள். இது குறித்து பிரதமர் மோடிக்கு வெளிநாடு வாழ் மைதேயி மக்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
தற்போது மணிப்பூரில் இனப்பிரச்னை நீரூபூத்த நெருப்பாகவே இருக்கிறது. அதனால்தான், மீண்டும் அங்கு கலவரப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், அங்கு மீண்டும் இணையதள சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அங்கு அமைதி திரும்புவதற்கான அறிகுறி கொஞ்சம்கூட தென்படவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com