கணவர்களே உஷார்!!! மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை..

கணவர்களே உஷார்!!! மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை..

சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் 32 வயதான ராமகிருஷ்ணன். கட்டிட தொழிலாளியான இவருக்கு 28 வயதான சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் சித்ரா கடந்த 4-ந் தேதி அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்புவதற்கு சற்று தாமதமாகி விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், வீட்டிற்க்கு வந்த தனது மனைவியிடம், எங்கு சென்று ஊர் சுற்றிவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார்.

மேலும், ஆத்திரம் அடங்காத ராமகிருஷ்ணன், சித்ராவை தகாத வார்த்தையால் திட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சித்ராவை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சித்ரா, நடந்த சம்பவம் குறித்து, சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்ரா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *