உஷார்!!! பெண்களை ஏமாற்றுவதையே வேலையாக செய்து வந்த காதல் மன்மதன்..

உஷார்!!! பெண்களை ஏமாற்றுவதையே வேலையாக செய்து வந்த காதல் மன்மதன்..

சென்னையை சேர்ந்தவர் 39 வயதான ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, ரேகா 2-வது திருமணத்துக்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்படி வரன் தேடும் போது அவருக்கு அறிமுகமானவர் தான் முகமது ஷாபான். புதுச்சேரியை சேர்ந்த 36 வயதான இவர், தான் பெரிய பணக்காரர் என்று ரேகாவிடம் கூறியுள்ளார். ஆனால் ரேகாவிற்கு இவரை விட வயது அதிகம் என்பதால் தன்னை விட வயது சிறியவரை திருமணம் செய்வதா என்று நினைத்துள்ளார்.

திருமணத்திற்கு ரேகா பின் வாங்குவதை அறிந்த முகமது ஷாபான், விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வது தான் எனக்கு லட்சிம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய ரேகா, முகமது ஷாபானுக்கு கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், முகமது ஷாபான் தன்னை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட ரேகா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு போலீசார் முகமது ஷாபானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களின் நகைகளை பறித்து வந்துள்ளார். இவர் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த செயலை அவர் நீண்ட நாட்களாகவே செய்து வந்துள்ளார். மேலும், பெண்களை ஏமாற்றுவதற்காக ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப், 3 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஆகியவற்றை முகமது ஷாபான் பயன்படுத்தியுள்ளார்.

5 சிம்கார்டுகளை பயன்படுத்தி, பெண்களிடம் செல்போனில் பேசுவதும், சாட்டிங் செய்வதையும் முழு நேர வேலையாக செய்து வந்துள்ளார். மேலும், ரேகாவிடம் உள்ள நகைகள் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்று கூறியுள்ளார். இதனால் அந்த நகைகளை மசூதியில் வைத்து பூஜை செய்தால் பலன் கிடைக்கும், அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏமாற்றியுள்ளார்.

ஆனால், 415 பவுன் நகைகளை வாங்கிய பிறகு ரேகாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதுபோன்ற மேலும் பல பெண்களை முகமது ஷாபான் ஏமாற்றி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *