இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ”டெல்லியில் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே நாளை வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்கூட்டியே தகவல் கிடைத்து இருந்தால் நான் வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கமாட்டேன். முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு சென்று இருப்பேன்” என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளார். சென்னையில் தற்போது கனமழை பெய்து வருவதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். கடைசியாக இந்தியா கூட்டணி கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் நடந்தது. அடுத்த கூட்டம் நாளை டெல்லியில் நடக்க இருந்த நிலையில் இக்கூட்டம் வரும் 18-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்தா பானர்ஜி இக்கூட்டத்தில் பங்கேற்க மறுத்து இருப்பது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா அளித்த பேட்டியில், ”இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்பதை மம்தா பானர்ஜி புரிந்துகொண்டுள்ளார். எனவேதான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருக்கிறார். இந்தியா கூட்டணி எங்கே இருக்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து தேநீர் விருந்து கொடுத்தார்கள். அதில் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார்” என்றார். 5 மாநில சட்டமன்ற தோல்வி குறித்து ஓமர் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், `இத்தோல்வி இந்தியா கூட்டணிக்கானது கிடையாது. காங்கிரஸ் கட்சிதான் தோல்வி அடைந்து இருக்கிறது’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com