இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியக் கூட்டணியிலிருந்து யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதைக் காங்கிரஸ் எதிர்க்கிறது. கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யலாம். இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பது கூட்டணியைச் சிதைத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அனைவரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்யப் பிரதமர் வேட்பாளர் முடிவுனை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.


பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதற்குக் கூட்டணி வைத்து, ஒரு அணியாக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கிறோம். கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்தாலும், தேசிய அளவில் இடதுசாரிக் கட்சிகள் செய்வது போலவே கூட்டணியில் இணைந்து போராடுவதை ஆம் ஆத்மி பரிசீலிக்கலாம். பொதுத் தேர்தலில் முடிந்தவரை ஒற்றுமையாகப் போராட அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் காங்கிரஸ் விரும்புகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com