இருப்பினும், மஹுவா மொய்த்ராவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நீதிபதி கத்பாலியா தனது தீர்ப்பில், “மனுதாரர் எம்.பி என்பதால், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லம், பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டவுடன் அவருக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. இது தொடர்பான மனு நிலுவையிலிருந்தாலும், உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்காததால், தற்போது அரசு இல்லத்தில் தொடர்ந்து இருக்க அவருக்கு உரிமை இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின்படி, அவர் கோரியபடி பாதுகாப்பு வழங்க முடியாது” எனக் கூறினார். இந்த நிலையில், டெல்லியின் டெலிகிராப் லேனில் உள்ள 9B அரசு இல்லத்திலிருந்து மஹுவா மொய்த்ரா இன்று காலையில் வெளியேறினார்.


மேலும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்டேட் இயக்குநரகத்தின் (Directorate of Estates) அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை காலை வருவதற்குள், அரசு இல்லத்தை மஹுவா மொய்த்ரா காலி செய்துவிட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மஹுவா மொய்த்ராவின் வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் தனது அறிக்கையில், “மஹுவா மொய்த்ரா இருந்த அரசு இல்லம், இன்று காலை 10 மணிக்கு முழுமையாக காலி செய்யப்பட்டு, உடைமைகள் அனைத்தும் அவரின் வழக்கறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு, எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே அரசு இல்லம் காலி செய்யப்பட்டுவிட்டது. இதில், வெளியேற்றம் எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com