அவர்கள் இன்று சட்டமன்றத்தின் மத்திய ஹாலில் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் மீதான பதவி பறிப்பு விசாரணை எப்போது நடைபெறும் என்பது தொடர்பான விபரம் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ராகுல் நர்வேகர் அளித்த பேட்டியில், “‘சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள பதவி பறிப்பு மனு மீது வரும் வாரத்தில் விசாரணை இருக்கும். தேவைப்பட்டால் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.


முன்னதாக ராகுல் நர்வேகர் டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் அமித் ஷா மும்பையில் லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்ய வந்த போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சந்தித்து எம்.எல்.ஏ.பதவி பறிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே ஒரு முறை இதே பிரச்னைக்காக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதில் மனுக்களை சபாநாயகரிடம் கொடுத்து இருந்தனர் .இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சபாநாயகருக்கு நெருக்கடி கொடுப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com