துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்தீபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் சி.பி.ஐ விசாரணையை முடித்து காவல் ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் குற்றவாளியாக குறிப்பிட்டு மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், “சி.பி.ஐ-யின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது, சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கைகையை ரத்து செய்ய வேண்டும். கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என சி.பி.ஐ நீதிமன்றத்தில் அர்ச்சுனன் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ-யும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com