“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பரபரப்புக்கு பஞ்சமில்லாத மதுரை மாவட்ட பா.ஜ.க-வில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், பிரசார அணி பொறுப்பாளருமான சரவணன் என்பவர், மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனுக்கும், கட்சித் தலைமைக்கும் அனுப்பிய கடிதம் ஒன்று, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், `நீங்கள் சமீபத்தில் 6 பேரை மையக்குழு ஒப்புதலுடன் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமித்திருக்கிறீர்கள். ஆனால், மையக்குழுவிலுள்ள கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாநகர் மாவட்டப் பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்டப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை தொடர்புகொண்டு கேட்டதற்கு, நீங்கள் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். நீங்கள் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு வருட காலத்தில் மூன்று, நான்கு முறை நிர்வாகிகளை மாற்றி அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், மொத்த நிர்வாகிகள் பட்டியலை நீங்கள் வெளியிடவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com