
புதிய சிம் கார்டு வாங்க போறவங்களுக்கு புதிய விதிமுறை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாக உள்ளது.
பொது மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் இந்தியாவில் ஏதோனும் ஒரு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தான் வருகிறது. அதன் அடிப்படையில் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி நிறைய மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனை தடுக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலாக உள்ளது. அதாவது சிம் கார்டு விற்பனை செய்யும் டீலர்கள் அரசு அங்கீகாரம் பெற்று அதன் விதிகளுக்கு உட்பட்டு தான் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில், அபராதம் 10 லட்சம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ALSO READ : UPI மூலம் பணம் அனுப்ப இனி 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!
அதுபோல, புதிய சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் மற்றும் மக்கள் தொகை தரவுகளை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஒருவர் மொத்தமாக 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்கி உபயோகிக்க முடியும். மேலும் அந்த சிம் கார்டின் வேலிடிட்டி முடிந்தவுடன் 90 நாட்களுக்கு பிறகு அந்த மொபைல் எண் வேறு ஒருவருக்கு சொந்தமாகும். இத்தகைய விதி முறைகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in