இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) மசோதா 2023, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்களே இல்லாத சூழலில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


ஏற்கெனவே, தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சரவைக் குழு முடிவுசெய்வதால், ஆட்சியிலிருக்கும் அரசு தங்களுக்குச் சாதகமான நபர்களைத் தேர்தல் ஆணையராக நியமிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, இதனை உச்ச நீதிமன்றத்துக்கு வழக்காகக் கொண்டுசென்றன. பின்னர் உச்ச நீதிமன்றமும், `பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு பரிந்துரைக்கும் நபர்களைத் தேர்தல் ஆணையர்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தது.


நன்றி
Publisher: www.vikatan.com