திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், ஐ.எஸ்.ஆர்.ஓ. நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்கள் மற்றும் வீடுகள் மூலம் 600 அறைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கிடையில், அயோத்தி நகராட்சி அதிகாரிகள், கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அயோத்தி நகராட்சி ஆணையர் விஷால் சிங்,”கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக ஃபைபர் கழிப்பறைகள் அமைக்கப்படும். பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படும். ராம ஜென்ம பூமி வளாகத்தில் ராமர் வாழ்க்கையின் 108 நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் ‘ராம் கதா கஞ்ச்’ தாழ்வாரம் கட்டப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com