இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை ஒழுங்காக நடைபெறும்போது, எடப்பாடிக்கு உதறல் வந்துவிட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரிக்கும் குட்கா வழக்கில் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. குற்றவாளிகளை விசாரிப்பதற்கான ஒப்புதலை ஆளுநர் வழங்காமல் இழுத்தடிக்கிறார். சி.பி.ஐ விசாரணை என்பதால்தான் குற்றவாளிகளும் ஆளுநர் மாளிகையில் ஒழிந்துக் கொள்ள வசதியாக இருக்கிறது. அதேபோல, கொடநாடு வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடி உள்ளிட்டோர் துடியாய் துடிக்கிறார்கள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
