மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் பிரிவு 370-ஐ அங்கு ரத்து செய்து, மாநிலத்தையும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது. இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள்மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த செப்டம்பரில் முடித்தது.


இத்தகைய சூழலில், “ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது. மத்திய அரசு அதை நீக்கியது செல்லும்” என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க தலைவர்கள் பலரும் வரவேற்றனர். அதேசமயம், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றமளிக்கிறதுதான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியிருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com