இதுகுறித்து முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “அதிமுகவின் பொதுக்குழு மூலமாக நீக்கப்பட்ட புல்லுருவிகளுக்கு கொம்பு சீவிவிடும் வேலையை சபாநாயகர் செய்கிறார். இது கண்டனத்துக்கு உரியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை, எங்கள் பொதுச் செயலாளர் அருகே உட்காரவைக்க கூடாது. ஒரு முன்னாள் முதல்வர் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார் அப்பாவு.


அப்படியென்றால், தன் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இடம் ஒதுக்கீடு செய்வாரா? சட்டமன்ற சபாநாயகர் என்பவர் எல்லாருக்கும் பொதுவானராக இருக்கவேண்டும். ஆனால், அவர் நடுநிலையோடு செயலபடவில்லை. அதற்கு இருக்கை விவகாரம் ஒன்றே போதுமானது.” என்றார் காட்டமாக.
தொடர்ந்து தி.மு.க தரப்பில் கேட்க முயற்சிக்கும்போது, “அவைக்குள் நடக்கும் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. சட்டத்தின்படி, சபையின் மரபுப்படி சரியான முடிவைதான் சபாநாயகர் எடுக்கிறார். அதை முதல்வரால்கூட கேள்வி எழுப்பமுடியாது. மக்களின் பிரச்னை குறித்து அவையில் பேசமுடியாத அ.தி.மு.க-வினர் தங்களின் பங்காளி சண்டை போட்டுக் கொண்டு, அவையின் நேரத்தைத்தான் வீணடிக்கிறார்கள்” என்கின்றனர்.


இதுகுறித்து அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டபோது, ” அ.தி.மு.க-வில் குழப்பம் இருந்தால் அவையில் அதை கொண்டு வரக்கூடாதென்று சபாநாயகர் அப்பாவு நினைக்கிறார். அதன்படிதான், ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக செயல்படுகிறோரோ என்ற எண்ணம் வராமல் இல்லை. முன்பிருந்த தனபால், ஜெயக்குமார் என எல்லா சபாநாயகர்களும், அவர்களின் கட்சி சார்ந்தே முடிவை எடுத்து வந்தனர். அதன்படிதான், அப்பாவு தி.மு.க சபாநாயகராவே நடந்து கொள்கிறார். இந்த இருக்கை விவகாரத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்தாலும், அவை விவகாரத்துக்குள் நீதிமன்றத்தால் தலையிடமுடியாது. இந்த குழப்பமான சூழ்நிலையில்தான், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தொடரும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com