
வாட்ஸ் அப்பை இந்த உலகில் பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு மக்களுக்கு தேவையான ஒன்றாக வாட்ஸ் அப் ஆகிவிட்டது. வாட்ஸ் அப் மூலம் தகவல்களை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக அனுப்பலாம். மொபைல் போனில் நெட் இருந்தால் போதும் வாட்ஸ் அப்பை நீங்க பயன்படுத்தலாம். 2015 ஆம் ஆண்டின் கணக்கின் படி வாட்ஸ் அப்பை 90 கோடி மக்கள் பயன்படுத்தி கொண்டு இருந்தனர்.
இப்போது இன்னும் அது அதிகரித்து தான் இருக்கும். அதற்கு தகுந்தவாறு ஒவ்வொரு ஆண்டும் வாட்ஸ் அப் புதிய அப்டேட்களை தந்துகொண்டு தான் இருக்கிறது. அதன்படி, புதிய அழைப்புகளை பாதுகாக்கும்படியான புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு உதவும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களிலும் வாட்ஸ் அப் அக்கௌன்டை லாகின் செய்யும் வசதி, தெரியாத நபர் யாரிடமாவது இருந்து அழைப்பு வருகிறது என்றால் அதனை mute செய்யலாம்.
மேலும் ஈமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி, ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் பேசியவுடன் அதில் இருக்கும் ஒரு சில தகவல்களை பின் செய்யும் வசதி என ஏகப்பட்ட வசதிகளை வழங்கியுள்ளது. இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருகின்றனர்.
ALSO READ > YouTube-ல வீடியோ போடுறீங்களா? கேர்புல்லா போடுங்க…
அந்த வகையில் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் கால் செய்வதற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது வாட்ஸ் அப் கால் மூலம் தவறான எண்ணத்தில் கால் செய்யும் நபர்களின் இருப்பிடத்தை கண்டறியலாம். மேலும் அவர்களிடம் இருந்து திரும்ப கால் வராத வண்ணம் மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்த புதிய அப்டேட் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களில் அனைத்து பயனாளர்களும் இதனை உபயோகித்து பயன் பெறலாம்.
நன்றி
Publisher: jobstamil.in