2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று (5 ஆம் தேதி) தொடங்கியது. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றனர். இந்த உலக கோப்பை போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நேற்று தொடங்கப்பட்ட முதல் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடியதில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை தொடரின் அடுத்த போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வருகிற அக்டோம்பர் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், உலக கோப்பை தொடரை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு தற்பொழுது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்கள் யாரும் மைதானத்திற்குள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல கூடாது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். அதுமட்டுமல்லாமல், பாதுகாப்பு பணிக்காக சேப்பாக்க மைதானத்தை சுற்றிலும் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in