குப்பையின் துர்நாற்றத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு, குப்பை வண்டி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ரோஹிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார்.
அவர்தான் தனது தந்தைக்கு ஒரு சிறுநீரகம் கொடுத்து, லாலுவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். நிதிஷ் குமார் அணி மாறியிருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `அடிக்கடி அணி மாறும் நிதிஷ் குமார், பச்சோந்திகளுக்கு போட்டியை கொடுக்கக்கூடியவர். நிதிஷ் குமாரின் இந்த துரோகத்தை பீகார் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் . நிதிஷ் குமார் அணி மாறுவார் என்று முன்பே தெரியும் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
